<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

வெள்ளி, 23 ஜூன், 2017

ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தலில் BJP-யின் வேட்பாளரை அவர்களது NDA கூட்டாளிகள் ஆதரித்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அதிமுக, YSR காங்கிரஸ்( ஜெகன்),TRS (சந்திரசேகர ராவ்-தெலங்கானா) ஆகியோர் ஆதரித்ததன் அர்த்தம் என்ன?
இந்த கட்சிகளின் ஆதரவுதான் BJPக்கு அப்பட்டமாக ஒரு வலதுசாரி வேட்பாளரை தேர்வு செய்ய தைரியம் தந்தது.வெற்றி நிச்சயம் என்ற நிலை உருவானது. இந்த கட்சிகள் அடிப்படையில் ஒரு வலதுசாரிகள் என பெயரிட முடியாது. பின்ன ஏன்?என்ன நடந்தது.
கடந்த 25ஆண்டுகளாக நவீன தாராளமய சூழல் இந்த கட்சிகளின் வர்க்க குணத்தை மாற்றி இருக்கிறது. இந்த கட்சிகளின் தலைவர்கள்-ஜெயலலிதா&கோ, ராஜாசேகர ரெட்டி&கோ, சந்திரபாபு நாயுடு+சந்தரசேகர ராவ்& கோ, ஆகியோர் வரன்முறையில்லா கொள்ளை ( Cronyism) நடத்த வாய்ப்பு கிடைத்தது. இந்த கொள்ளையை பாதுகாப்பது தவிர வேறு என்ன தத்துவ சங்கமம் பிஜேபி-க்கும் இவர்களுக்கும் இடையே நடந்தது.
ஆகவே தான் கோவிந்த்-அவர்களை எதற்காக ஆதரிக்கிறோம் எனக்கூட இவர்களால் கூற முடியவில்லை. CBI/வருமானவரி துறையின் அமலாக்க பிரிவு கடந்த சில காலமாக இந்த வேலைக்கு கனகச்சிதமாக பயன்படுத்தப் பட்டது. அதிமுக,தமிழகம் எவ்வளவு வஞ்சிக்கபட்டாலும் பரவாயில்லை நாங்கள் "நிர்வாண ஆதரவு" நிலை எடுப்போம் என்றானது.
ஆனால் BJP-RSS வகையறாக்களுக்கு தனது ஒற்றை அஜண்டாவை நகர்த்த எந்த அதர்மத்தை செய்யலாம் என புதிய கீதையை கைவசம் வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக